அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறைமாவட்டம் உதயமாகி 38 வருடங்கள். விஷேட வழிபாடு தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயத்தில்

மன்னார் மறைமாவட்டம் உதயமாகி 38 ஆண்டு விழா இன்று சனிக்கிழமை
(26.01.2019) இறை வழிபாட்டுன் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் தோட்வெளி வேதசாட்சிகளின் ஆலயத்தில் காலை 7 -30 மணிக்கு கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறது.

-மன்னார் மறைமாவட்டத்திலுள்ள 46 பங்கு தளங்களிலிருந்தும் பெருந்தொகையான பக்தர்கள் இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கினறனர். இதற்கான போக்குவரத்துக்களும் ஒவ்வொரு பங்கு தளங்களிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

-இவ் விழாவின்போது மன்னார் மறைமாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பங்குத் தளங்களும் இவ்வாண்டு மேற்கொள்ள இருக்கும் மேய்ப்பு பணி திட்டங்களை பங்கு மேய்ப்புப் பணி சபை பிரதிநிதிகளால் ஆயர் முன்னிலையில் சமர்பிக்கப்பட்டு அதற்கான ஆசீரையும் பெறும் நிகழ்வும் இடம்பெறுகின்றன.

-இவ் விழாவில் திருமலை மறைமாவட்ட ஆயர் மேதகு நோயல் இம்மானுவேல் ஆண்டகை விஷேட அதிதியாக கலந்து கொள்வதுடன் அத்துடன் மறைசாட்சிகளின் 475 ஆண்டு தினமும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



மன்னார் மறைமாவட்டம் உதயமாகி 38 வருடங்கள். விஷேட வழிபாடு தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயத்தில் Reviewed by Author on January 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.