அண்மைய செய்திகள்

recent
-

அகதிகளை இந்தியா பாதுகாக்க வேண்டும்! மனித உரிமை அமைப்பு கோரிக்கை -


திரிபுராவில் சிறைப்படுத்தப்பட்டுள்ள 31 ரோஹிங்கியா அகதிகளையும் இந்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என Fortify Rights என்ற மனித உரிமை கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஜனவரி 18 முதல் திரிபுரா அருகே உள்ள இந்திய - பங்களாதேஷ் எல்லைப்பகுதியில் யாருமற்ற நிலப்பகுதியில் சிக்கிக்கொண்ட ரோஹிங்கியா அகதிகளை கையாள்வதில் இந்திய படைகளுக்கும் பங்களாதேஷ் படைகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டு இருந்தது.

அகதிகளை தங்கள் நாட்டு எல்லைக்குள் தள்ளுவதாக இரு படைகளும் பரஸ்பரமாக குற்றம்சாட்டி வந்தன.
அதன் தொடர்ச்சியாக இரு படைகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், 31 ரோஹிங்கியா அகதிகளும் திரிபுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அகதிகள் முன்னர் ஜம்மு - காஷ்மீரில் அமைந்திருக்கும் அகதி முகாமில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சூழலில் இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள Fortify Rights அமைப்பின் தலைமை செயல் அதிகாரி மாத்யூ ஸ்மித்,
“இனப்படுகொலையை எதிர்கொள்ளும் ரோஹிங்கியா மக்களை இந்தியா பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பை வேண்டும் அம்மக்களை
நாட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்றக் கூடாது,” எனக் கூறியுள்ளார்.
பங்களாதேஷ் அகதிகள் நிவாரணம் மற்றும் நாடுதிரும்பலுக்கான ஆணையர் அபுல் கலாமின் கணக்குப்படி, கடந்த மே 2018 முதல் இந்தியாவிலிருந்து பங்களாதேஷத்துக்கு 1,300க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்தியாவை பொறுத்தமட்டில், 40,000 ரோஹிங்கியா அகதிகள் பல்வேறு முகாம்களில் வசித்து வருகின்றனர். அதில் 18,000 பேர் ஐ.நா.விடம் பதிவு செய்தவர்கள்.
இதற்கு முன்னர், ஐந்து பேர் கொண்ட ஒரு ரோஹிங்கியா குடும்பத்தின் மீதும் அக்டோபர் 2018ல் 7 ரோஹிங்கியா அகதிகளின் மீதும் மியான்மருக்கு நாடுகடத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது.
அகதிகளை இந்தியா பாதுகாக்க வேண்டும்! மனித உரிமை அமைப்பு கோரிக்கை - Reviewed by Author on January 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.