மன்னார் பிரதான பாலத்தில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் கைது-(படம்)
மன்னார் பிரதான பாலத்தில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவரை நேற்று வெள்ளிக்கிழமை (25) இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
-கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினை அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு மன்னார் பிரதான பாலத்தில் வைத்து ஹயஸ் ரக வாகனத்தை சோதனையிட்ட போது சுமார் 2 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதி மீட்கப்பட்டது.
இதன் போது குறித்த வாகனத்தில் பயணித்த உடுகம மற்றும் ஜாஏல பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 47 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள்,கேரள கஞ்சா பொதி மற்றும் வாகனம் என்பன மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வருகின்றது.
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் பிரதான பாலத்தில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் கைது-(படம்)
Reviewed by Author
on
January 26, 2019
Rating:
No comments:
Post a Comment