அண்மைய செய்திகள்

recent
-

முதலிடத்தை பெற்று சாதனை படைத்த கிளிநொச்சி மாவட்டம்! -


கிளிநொச்சி மாவட்டச் செயலகம் உற்பத்தித் திறனில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் 2016/2017 ம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.


உற்பத்தித் திறன் செயலகத்தினால் இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உற்பத்தி திறன் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் இரண்டு ஆண்டிற்கு ஒரு தடவை உற்பத்தி திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இப் போட்டியில் இம்முறை கலந்து கொண்டு வடக்கு மானாணத்தில் முதல் முறையாக முதல் இடத்தைப் பெற்றுக் கொண்ட பெருமை கிளிநொச்சி மாவட்டத்திற்குரியது.
அதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டிற்கு உரிய உற்பத்தி திறன் போட்டியில் போட்டியில் முதன் முதலாக போட்டியிட்டு இரண்டாம் நிலையைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்ற உற் உற்பத்தி திறன் போட்டியில் வடமாகாணத்தில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட பெருமையை கிளிநொச்சி மாவட்ட செயலகம் பெற்றுக் கொள்கிறது.
முதலிடத்தை பெற்று சாதனை படைத்த கிளிநொச்சி மாவட்டம்! - Reviewed by Author on January 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.