விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் ம.வி பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்ற 'ஜோசப்வாஸ் தினம்' மற்றும் 'கால் கோள் விழா'
மன்னார் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் மகா வித்தியாலயத்தின் 'ஜோசப்வாஸ் தினம்' மற்றும் 'கால் கோள் விழா' இன்று (16) புதன் கிழமை காலை 10.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம் பெற்றது.
-குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களான பங்குத்தந்தை அருட்குமரன் அடிகளார்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மடு வலயக்கல்வி பணிமனை அதிகாரி ஏ.ஜே.குரூஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது ஜோசப்வாஸ் தினம் கொண்டாடப்பட்டதோடு,புதிதாக தரம் 1 ற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களை வரவேற்கும் 'கால் கோள்' விழா இடம் பெற்றது.
-இதன் போது தரம் 1 மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்வகள் இடம் பெற்றதோடு, தரம் 1 மாணவர்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாடசாலை கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
மேலும் தனது நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி கணணிகளை பாடசாலை அதிகரிடம் கையளித்தார்.
-குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் ம.வி பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்ற 'ஜோசப்வாஸ் தினம்' மற்றும் 'கால் கோள் விழா'
Reviewed by Author
on
January 17, 2019
Rating:
No comments:
Post a Comment