2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி-25
2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்துள்ளார்.
பாடசாலை விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னரும், தனியார் பரீட்சார்த்திகள் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த முறை பரீட்சைகள் புதிய மற்றும் பழைய முறைப்படி இடம்பெறவுள்ளதாகவும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விரைவாக அனுப்பி வைக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி-25
Reviewed by Author
on
February 15, 2019
Rating:
No comments:
Post a Comment