அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தனியார் கல்வி நிலையம் தீ வைப்பு-(படம்)

மன்னார் பெற்றா பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் வகுப்பரை கூடம் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் தீவைக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாகம் இன்று சனிக்கிழமை காலை 8 மணியளவில் குறித்த கல்வி நிலையத்தை திறந்த போது தீப்பற்றி எரிவதை கண்ட நிலையில், உடனடியாக தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் பாரிய சேதங்கள் ஏவையும் ஏற்படவில்லை.இன்று சனிக்கிழமை அதிகாலை குறித்த கல்வி நிலைய பகுதிக்கு சென்றுள்ள இனம் தெரியாத நபர்கள் மண்ணென்னை நிறப்பப்பட்ட போத்தல்களில் தீ வைத்து குறித்த கல்வி நிலையத்தின் வகுப்பரை கூடம் மீது வீசியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இன்போது தீ ஏற்பட்டு குறித்த வகுப்பரையின் உள்ளக பகுதிகளில்  மரத்தினாலான பகுதிகள் எறிந்துள்ளது.
 உறுகிய நிலையில் இரண்டு பிளாஸ்ரிக் போத்தல்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்திய நிலையில் அவசர பொலிஸ் சேவை 119 அழைப்பை ஏற்படுத்திய போதும் அவர்கள் உரிய நேரத்திற்கு வரவில்லை என குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.இதே வேளை கிராம அலுவலகர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமையை அவதானித்தனர்.

அண்மைக் காலங்களாக மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு இடையில் தொடர் போட்டி நிலவுவதாகவும் தெரிய வருகின்றது.



மன்னாரில் தனியார் கல்வி நிலையம் தீ வைப்பு-(படம்) Reviewed by Author on February 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.