அண்மைய செய்திகள்

recent
-

ஃபருக்கும்.. ராமலிங்கமும்.. மதவெறி பயங்கரவாதிகளும்..!

மதமாற்ற கும்பலால் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி பேஸ்புக்கில் சுற்றியபோது, உண்மையைச் சொல்ல வேண்டுமானால் வழக்கம் போல் சந்தேகம் தான் வந்தது.

ஏனெனில் காவிகள் எப்படி புரளி கிளப்பி அரசியல் செய்வார்கள் என்ற பல முன் உதாரணங்கள் இருக்கின்றன என்பதால் கொஞ்சம் பொறுமையாக இருக்கலாம்.. அதோடு இதுபோன்ற சென்சிடிவ்வான விசயங்களில் காவல்துறையின் முதற்கட்ட விசாரணைக்கு முன்பே நாம் கருத்தை தெரிவிப்பது மத அரசியல்வாதிகளுக்கு தான் பயன்படும் என்பதால் ஜனநாயகத்தை நம்பும் பலரும் அமைதி காத்தார்கள்.

ஆனால் இப்போது திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில்,

சர்புத்தீன்(60) ,முகம்மது ரிஸ்வான்( 23) ,முகம்மது ரியாஸ் ( 27), நிஜாம் அலி (33 ), அஸாருத்தீன் (26) ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் இது மதம் மாற்றம் தொடர்பாக நடந்த கொலை என்பதும், அனைவரும் திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரச்சினைக்குரிய காணொளியை பார்த்தேன்.

அதில் ராமலிங்கம் மிக நட்பு முறையிலும் காரசாரமாகவும்தான் எதிரில் இருப்பவர்களுடன் விவாதிக்கிறார்.

விவாதத்தையொட்டி இஸ்லாமியர் ஒருவரின் குல்லாவை தனக்கு போட்டுக்கொண்டு சலாம் அலைக்கும் என்கிறார். பதிலுக்கு அந்த இஸ்லாமியருக்கு திருநீர் பூசிவிடுகிறார். (அவர் விருப்பம் இல்லாமல் அவருக்கு திருநீர் பூசிவிட்டது நிச்சயம் தவறுதான். அந்த நபரே பூசிக்கொள்வது என்பது வேறு..) உழைப்பு தான் கடவுள் என்கிறார்.

ராமலிங்கம் பேசுவதை பார்த்தபோது , மேலோட்டமாக இந்துத்துவ அரசியல்வாதிகள் மதமாற்றம் செய்பவர்களுக்கு எதிராக பேசுவதை கேட்டு கொதிப்பு நிலையில் இருக்கும் ஒரு எளிய இந்து மதத்தைச் சேர்ந்தவராகவே இருந்திருக்கிறார். அவருக்கு பெரிய சிந்தாந்த பார்வை இருப்பதுபோல் தெரியவில்லை.

வாடகை வீடு, தீவிரவாதிகள் என்றெல்லாம் சில தவறான வார்த்தைகளை விட்டிருக்கிறார்.

இதற்காகவாடா ஒரு மனுஷனை வெட்டிக் கொல்வீங்க என்று அதிர்ச்சியாகவும் ஆத்திரமாகவும் இருக்கிறது.

இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் கோவையைச்சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான ஃபரூக் என்ற இஸ்லாமிய மதத்தில் பிறந்துவிட்ட இளைஞர் பேஸ்புக்கில் கடவுள் மறுப்பு கருத்துகளை எழுதியதற்காக இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

அவரது இரண்டு பிஞ்சு குழந்தைகளின் முகத்திற்காக கூட கருணைக்காட்டாத அந்த மிருகங்கள் சிறையிலிருந்து தற்போது வெளியே வந்து ஜாலியாக உலாவிக்கொண்டிருக்கின்றன.

இப்போது ராமலிங்கம் அதே பாணியில் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது பேஸ்புக் பக்கத்தில் சென்று பார்த்தேன். இஸ்லாமியர்கள் உட்பட எல்லோரிடமும் நட்பு பாராட்டக்கூடியவராகவும்.. சக மனிதர்களுக்கு உதவக்கூடியவராகவும் இருந்திருக்கிறார்.

டீன் ஏஜ் வயதில் மூன்று ஆண் பிள்ளைகள் அவருக்கு இருக்கிறார்கள். அந்த பசங்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. அவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விட்டிருக்கலாம்.. அத்துமீறி திருநீர் பூசியிருக்கலாம்..

சாதாரணமாக நெற்றியை துடைத்துவிட்டு கடந்து போயிருக்க வேண்டிய ஒரு நிகழ்வை ஒரு படுகொலையில் கொண்டுபோய் முடித்திருக்கிறார்கள். இதில் சகிப்புத்தன்மையை கடைப்பிடிக்க முடியாதவர்கள் என்ன இனிய மார்க்கத்தை போதித்துவிடுவீர்கள். அந்த இறைவனுக்கு தான் உங்களை பிடித்துவிடுமா என்ன..

இந்துத்துவா அரசியலை எவ்வளவோ விமர்சிக்கிறோம்.. விமர்சிப்பவர்கள் பெரும்பாலும் அதே மதத்தைச்சேர்ந்தவர்களாகதான் இருப்பார்கள்.. அங்கு மதம் ஒரு நிறுவனமாயமாக்கப்படாததால் இந்து மதத்தைச்சேர்ந்தவர்களிடம் ஒரு ஜனநாயகத்தன்மை உண்டு.

எந்த மதத்தவரின் பண்டிகையானாலும் அவர்கள் வீட்டு பலகாரங்களை எந்த தயக்கமும் இல்லாமல் உண்டு பழகக்கூடியவர்கள் இந்துக்கள். ஆனால் பெரும்பாலான கிறிஸ்த்தவர்கள் இஸ்லாமியர்களிடம் இந்த பண்பு துளியும் கிடையாது என்பதுதான் உண்மை. விதிவிலக்குகளாக ஒரு சிலர் இருக்கலாம்.

அதேப்போல் சக இந்து ஒரு அயோக்கியத்தனம் செய்தால் உடனடியாக அதை விமர்சிப்பது என்பதெல்லாம் இந்துக்களுக்கு இயல்பான ஒன்று.

இப்படி சொல்வதால் பாலாவுக்குள் ஒரு இந்துத்துவவாதி இருக்கிறான் என்று கூட உங்களுக்கு தோன்றலாம்.. அதுபற்றி எனக்கு கவலை இல்லை.

நான் கோவிலுக்கும் போகிறேன்.. சர்ச்சுக்கும் போகிறேன்.. மசூதிக்கு சென்று தொழுகையும் செய்திருக்கிறேன்.. என் மனதில் மதம் கடவுள் குறித்து ஒரு சிறு சஞ்சலமும் வந்ததில்லை..

இந்து கிறிஸ்து முஸ்லீம் என்று யாராகவும் இருங்கள்.. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.சக மனிதர்களிடம் அன்பு பாராட்ட முடியாதவர்கள்.. சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் அப்படி என்ன கடவுளுக்கு புடுங்கப்போகிறீர்கள்..

காணொளியில் நீங்களாம் தீவிரவாதிகள் என்று ராமலிங்கம் சொல்கிறார்.. அதை பார்த்தபோது வருத்தமாக இருந்தது.. அந்த வார்த்தை காயப்படுத்தியிருந்தால் அவர் மீது புகார் போலீசில் கொடுத்து நடவடிக்கை எடுத்திருக்கலாம்..

ஆனால் கொலை செய்து இப்போது அந்த மனிதன் சொன்ன சொல்லை உண்மை என்று நிரூபித்தது நீங்களும் உங்கள் மதவெறியும் தானே..

மதம் தான் இந்த கொலைக்கு மையம் என்பதால் நிச்சயமாக இது இஸ்லாமியர்களின் மதவெறி பயங்ரவாதம் தான்.

இதுபோன்ற மூடர்கள் செய்யும் பயங்கரவாதத்தால் அப்பாவி இஸ்லாமியர்களும் பொதுவெளியில் பாதிக்கப்படுகிறார்கள்..

இந்தியாவும் தமிழ்நாடும் என்னமாதிரியான சூழலில் இன்று இருக்கிறது. இந்துத்துவ அரசியல்வாதிகள் பிடியில் தமிழகம் சிக்கியிருக்கும் சூழலில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இப்படி ஒரு பாதகத்தை செய்திருக்கிறீர்களே பயங்கரவாதிகளே..

மதம் மதம்னு சொல்லி என்ன சாதிக்கப்போறீங்க.. எல்லாப்பயலும் செத்தா இறுதியில் புழுதான் திங்கப்போகுது..

மதம் பிடிக்கக்கூடிய யானை சின்னத்தம்பி குழந்தையைப்போல் மனிதர்களுக்கு நடுவில் உலா வருகிறது..

ஆனால் பகுத்தறிவு நிரம்பியவன் என்று சொல்லும் மனிதர்கள் மதவெறி பிடித்து சக மனிதனை வெட்டிக்கொல்கிறீர்களே..

இறுதியாக என் இஸ்லாமிய நண்பர்களுக்கு அக்கறையாக ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..

தயவு செய்து உங்கள் பிள்ளைகளை இதுபோன்ற மூளைச்சலவை செய்யும் இஸ்லாமிய மதவெறிப்பிடித்த பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பாக வளருங்கள்..

-கார்ட்டூனிஸ்ட் பாலா

ஃபருக்கும்.. ராமலிங்கமும்.. மதவெறி பயங்கரவாதிகளும்..! Reviewed by Author on February 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.