அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மறைந்த அருட்சகோதரர் கில்லறி நினைவு கால்பந்தாட்டம்-படங்கள்

மன்னார் சாவற்கட்டு கில்லறி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மறந்த அருட்சகோதரர் கில்லறி அவர்களின் 100வது பிறந்த தினத்தையும் கில்லறி விளையாட்டுகழகம் உதயமாகி 20 வருட பூர்த்தியையும் முன்னிட்டு.

 வடமாகாண ரீதியாகா முன்னிலையில் உள்ள 60 விளையாட்டு கழகங்களை உள்ளடக்கி அணிக்கு ஒன்பது பேர் கொண்ட கில்லறி வெற்றி கிண்ண உதைபந்தாட்ட போட்டியானது இன்று காலை 9 மணியளவில் மன்னார் பொது விளையாட்டரங்கில் அருட்சகோதர் ஸ்ரனிஸ்லாஸ் தலைமையில் கில்லறி விளையாட்டு கழக நிர்வாக உறுப்பினர்களுடன் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக இரண்டு குழுக்களாக 60 அணிகளும் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம் பெற்று ஒவ்வொறு குழுக்களிலும் இருந்து 8 அணிகள் வீதம் 16 அணிகள் லீக் சுற்றுகளுக்கு தெரிவாக உள்ளன.
குறித்த போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு 750000 ரூபா மற்றும் நினைவு சின்னம் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடதக்கது.
 










மன்னாரில் மறைந்த அருட்சகோதரர் கில்லறி நினைவு கால்பந்தாட்டம்-படங்கள் Reviewed by Author on February 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.