இந்தியாவில் வெளியிடப்படும் சனத் ஜெயசூரியவின் சுயசரிதை
இந்தியாவில் வெளியாகும் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் டைம்ஸ் ஒப் இந்தியா உட்பட சில பத்திரிகைகளின் கிரிக்கெட் செய்தியாளராக மட்டுமல்லாது தற்பொழுது கிரிக்கெட் விமர்சகராக செயற்பட்டு வரும் சந்திரேஷ் நாராயணன் என்பவர் இந்த சுயசரிதையை எழுதியுள்ளார்.
சனத் ஜெயசூரிய இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடி காலத்தில் குறைவான பந்துகளுக்கு அதிகளவான ஓட்டங்களை குவித்த வீரர் என்பதுடன் மாஸ்டர் பிளாஸ்டர் என புனைப்பெயரில் அழைக்கப்படுகிறார்.
445 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சனத் ஜெயசூரிய 13 ஆயிரத்து 430 ஓட்டங்களை பெற்றுள்ளார். 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 ஆயிரத்து 973 ஓட்டங்களை பெற்றுள்ளார். சகல துறை ஆட்டகாரரான அவர், ஒரு நாள் போட்டிகளில் 323 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்தியாவில் வெளியிடப்படும் சனத் ஜெயசூரியவின் சுயசரிதை
Reviewed by Author
on
February 16, 2019
Rating:
No comments:
Post a Comment