அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சர்வமதகுழு ஏற்பாட்டில் கருத்தமர்வு நிகழ்வு-படங்கள்

தேசிய சமாதான பேரவை அணுசரனையில் CCT நிருவனத்தின் ஒழுங்கமைப்பில் LIRC-மன்னார் பிரதேச சர்வமத குழு ஏற்பாட்டில்  தனி நபர் ரீதியான பிணக்குகள் மத ரீதியான பிணக்குகளாக பரிமாற்றம் அடைவதை தடுப்பது தொடர்பாகவும்

மதம் சார்ந்த பிணக்குகள் ஏற்படாமல் அதே நேரத்தில் ஏற்படும் பட்சதில் அவ் பிரச்சினைகளை தீர்பதில் சமய தலைவர்களின் பங்களிப்பு தொடர்பான விடயங்களியும் தெளிவு படுத்தும் செயலமர்வானது திரு.மதனி உவைஸ் தலைமையில் 16-02-2019  காலை 10 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சமூக பொலிஸ் சேவை உத்தியோகஸ்தர்கள் கிராம சேவகர்கள் மத தலைவர்கள் மத ஸ்தலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் சர்வ மதம் சர்ந்த கிராம மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்

குறித்த நிகழ்வில் கிராம ரீதியில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் மதப்பிரச்சினைகள் தொடர்பாக ஆரயப்பட்டதுடன் அவ்வாறன பிரச்சினைகளை கிரம ரீதியில் முரண்பாடுகள் இன்றி தீர்த்து கொள்வது தொடர்பான விரிவுரைகள் இடம் பெற்றதுடன் அவதற்குறிய நடைமுறை ஆலோசனைகள் தொடர்பாக கருத்துக்கள் நிகழ்வுகளில் பங்குபற்ரியவர்களிடம் இருந்து உள்வாங்கப்பட்டு  அது தொடர்பான தெளிவூட்டள்களும் வழங்கப்பட்டது

தொடர்சியாக மன்னார் மாவட்டத்தில் கிராம மட்ட ரீதியிலான மத நல்லினக்கத்தை சீர்குகுழைக்கும் வகையில் மத சிலைகள் உடைக்கப்பட்டு வரும் நிலையில் இவ் கருத்தமர்வு இடம் பெற்றது குறிப்பிடதக்கது.











மன்னார் சர்வமதகுழு ஏற்பாட்டில் கருத்தமர்வு நிகழ்வு-படங்கள் Reviewed by Author on February 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.