அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து-இளைஞர் பலி-(படம்)

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, 2 ஆம் கட்டை பகுதியில் உள்ள புதிய குடியிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது ஜே.ரமீஸ் (வயது-23) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி , 2 ஆம் கட்டை பகுதியில்  நேற்று திங்கட்கிழமை மாலை நீர் குழாய் இணைப்பு பணிகளை    ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில்,மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2 ஆம் கட்டை பகுதியில்   குடியிருப்பு பகுதியில் வைத்து நேற்று மாலை 4.30 மணியளவில் மோட்டார் சைக்கிலில் வந்த பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது  முஹம்மது ஜே.ரமீஸ் என்பவர் பெக்கோ (ஜே.சி.பி) ரக வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளனார் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த இளைஞர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து இடம் பெற்ற விதம் தொடர்பில் உண்மை விபரங்கள் வெளியாகவில்லை.

மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் குறித்த பெக்கோ (ஜே.சி.பி) வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து-இளைஞர் பலி-(படம்) Reviewed by Author on February 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.