அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தூய மரியன்னை ஆலய திருவிழா சிறப்பாக இடம்பெற்றது-படங்கள்

மன்னார் மாவட்டத்தின் நீண்டகால விசுவாசப் பாரம்பரியத்தைக் கொண்டதுமான மன்னார் தூய மரியன்னை ஆலய விழா ( காணிக்கை மாதா) 09நாட்கள் ஆயத்த வழிபாட்டோடு இன்று 02.02.2019 சனிக்கிழமை காலை திருவிழா கொண்டாடப்பட்டது.

மன்னார் மறைமாவட்டத்தில் தெய்வீகத் தியான இல்லத்தை ( டிவைன் தியான இல்லம்) வின்சென்சியன் துறவற சபையின் கேரள மாகாணத்தைச் சோந்த அருட்பணியாளர்களான அருட்பணி றபாயேல் மற்றும் அருட்பணி சாயு ஆகியோர் இந் நாட்களில் இறைவார்த்தையை விளக்கியுரைத்து வழிபாடுகளை நடாத்தினர்.
இன்றை திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளார்அவர்களுடன் ஏனைய அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்ட இத் திருப்பலியில் பல அருட்பணியாளர்களும்
துறவிகள், இறைமக்கள், அரச அரச சார்புற்ற பணிநிலை பணியாளர்கள் பலர்  கலந்து செபித்தனர். இன்று மாலை மன்னார் நகர வீதி வழியாக அன்னையின் திருவுருவப் பவனி இடம் பெறவுள்ளது.













மன்னார் தூய மரியன்னை ஆலய திருவிழா சிறப்பாக இடம்பெற்றது-படங்கள் Reviewed by Author on February 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.