அண்மைய செய்திகள்

recent
-

மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற


புடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார்கள். இது உடலுக்கு ஆரோக்கியம் தர கூடிய காய்கறிகளில் ஒன்றாகும்.
புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன.
இவை எல்லாவற்றையும் விட புடலங்காயில் மிக அதிகமாக நீர்ச்சத்து இருக்கிறது.

இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடல் பருமன் ஏற்படும். அந்த பருமனைக் குறைக்கும் தன்மை புடலங்காய்க்கு உண்டு என்று சொல்லப்படுகின்றது.
புலங்காய சாறு பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • சின்ன சின்னதாக புடலங்காயை நறுக்கியோ அல்லது சாறு பிழிந்தோ டிக்காஷன் போல செய்து, காய்ச்சல் சமயங்களில் குடித்து வர காய்ச்சல், மலேரியா காய்ச்சல் கூட தீர்ந்து போகும்.
  • சிலருக்கு உள் காய்ச்சல் இருக்கும். அதுகூட இந்த புடலங்காய் சாறு தீர்க்கும். டயேரியாவை குணப்படுத்தும்.
  • ஒரு நாளைக்கு மூன்று வேளையும் இந்த புடலங்காய் சாறினை குடித்து வந்தால், மஞ்சள் காமாலை மிக விரைவாக குணமடைந்து விடும்.
  • புடலங்காய் சாறினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மன அழுத்தம் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும்.
  • ஒரு நாளைக்கு இரண்டு கப் அளவுக்கு புடலங்காய் குடித்து வந்தால், இதயம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்னையும் உண்டாகாது.
  • காலையில் வெறும் வயிற்றில் தினமும் காலையில் இரண்டு ஸ்பூன் புடலங்காய் சாறு குடித்து வந்தால் போதும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அனைத்தும் சரியாகும்.
  • எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் அடிக்கடி புடலங்காயைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் மிகக்குறைந்த அளவு கலோரிகளே உள்ளதாலும் கொழுப்புச் சத்து இல்லாமல் இருப்பதாலும் உடல் எடையானது மிகுந்த கட்டுக்குள் வருமாம்.
  • புடலங்காய் சாறினைக் எடுத்து தலைமுடியின் வேர்க்கால்களில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து விட வேண்டும். இந்த சாறினைத் தேய்த்து அரை மணி நேரம் வரை ஊற விட்டு பின்னர் மென்மையான ஷாம்புவை கொண்டு தலையை அலசினால் போதும், பொடுகுப் பிரச்னைகள் சரியாகிவிடும்.
  • புடலங்காயை சாறெடுத்து குடித்து வர உடலில் நச்சுக்கள், கழிவுகள் சேராமல் இருந்தால் தான் உடல் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும்.
  • புடலங்காயில் மிக அதிக அளவில் கால்சியம் நிறைந்திருப்பதால், பற்களையும் எலும்புகளையும் மிக வலிமையாக வைத்திருக்கும் தன்மை கொண்டது. கால்சியம், மினரல்கள் மற்றும் வைட்டமின் டி நிறைந்து காணப்படுவதால், பற்கள் மிக உறுதியாக இருக்கும்.
  •  
மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற Reviewed by Author on February 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.