அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடுக்கரையில் அறநெறிப் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டி வைத்த செல்வம்mp-படம்

மன்னார்  பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடுக்கரை ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் அறநெறிப் பாடசாலைக்கான அடிக்கல் இன்று  ஞாயிற்றுக்கிழமை03-02-2019  காலை நடப்பட்டது.

குறித்த அடிக்கல்லினை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.

நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தகுமார் தலைமையில் நடைபெற்றகுறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலர் சி.ஏ.மோகன்றாஸ், மேலதிக மாவட்ட செயலர் சி.குணபாலன், அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பிரத்தியேக செயலாளர்,மன்னார், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர்கள் கலந்து கொண்டனர்.

வீடமைப்பு நிர்மானத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் இந்தக் கட்டடம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






மன்னார் மடுக்கரையில் அறநெறிப் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டி வைத்த செல்வம்mp-படம் Reviewed by Author on February 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.