அண்மைய செய்திகள்

recent
-

அதிகாலையில் இலங்கை கடற்படை தாக்குதல்! தப்பியோடிய இந்திய மீனவர்களுக்கு ஏற்பட்ட நிலை -


மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவிற்கு அருகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினருக்கு பயந்து தப்பியோடிய போது படகு ஒன்று கவிழந்து விபத்துக்குள்ளாகியதாகவும், கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இராமேஸ்வரத்தில் இருந்து 3000க்கும் மேற்பட்ட மீன்வர்கள் விசை படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், கச்சத்தீவிற்கு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது நேற்று அதிகாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள தமிழக மீனவர்கள், மத்திய - மாநில அரசு இணைந்து மீன்பிடி தொழிலை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் இலங்கை கடற்படை தாக்குதல்! தப்பியோடிய இந்திய மீனவர்களுக்கு ஏற்பட்ட நிலை - Reviewed by Author on February 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.