அண்மைய செய்திகள்

recent
-

ஐபிஎல் போட்டிகளில் 300 சிக்சர்கள்! புதிய வரலாற்று சாதனை படைத்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் -


ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் 2 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டியில் மொத்தம் 300 சிக்சர்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.

2019 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதிய நிலையில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பஞ்சாப் வீரர் கெய்ல் 29 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார்.

இதில் இரண்டு சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம், ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றதோடு, புதிய வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார்.

கெய்ல் தற்போது வரை ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 300 சிக்சர்களை விளாசியுள்ளார்.


ஐபிஎல் போட்டிகளில் 300 சிக்சர்கள்! புதிய வரலாற்று சாதனை படைத்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் - Reviewed by Author on March 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.