காஷ்மீரில் குண்டுவீச்சு தாக்குதல்: 32 பேர் படுகாயம்.. 4 பேர் கவலைக்கிடம்!
காஷ்மீரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த ஜம்மு பேருந்து நிலையத்தில் மர்ம நபர் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் அங்கிருந்த பெரும்பாலான ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் காயமடைந்துள்ளனர். அதோடு அங்கு நின்று கொண்டிருந்த பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமானது.
இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் காயமடைந்த பொதுமக்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் பலியாகியதோடு, தற்போதுவரை 32 பேர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இதில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்ட மூன்று வாரங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த யாசிர் பாத் என்பவரை கைது செய்துள்ளனர். இதனை ஜம்மு ஐ.ஜி உறுதி செய்துள்ளார்.
காஷ்மீரில் குண்டுவீச்சு தாக்குதல்: 32 பேர் படுகாயம்.. 4 பேர் கவலைக்கிடம்!
Reviewed by Author
on
March 08, 2019
Rating:
No comments:
Post a Comment