51 மாணவர்களுடன் பாடசாலை பேருந்துக்கு தீ வைத்த நபரால் பரபரப்பு: அதிர்ச்சி சம்பவம் -
மத்திய தரைக்கடல் பகுதியில் அகதிகள் கொத்துக் கொத்தாக மரணமடைவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கே பாடசாலை பேருந்துக்கு தீ மூட்டியுள்ளார்.
செனகல் நாட்டவரான Ousseynou Sy கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இத்தாலிய குடியுரிமை பெற்று, இங்கேயே குடியிருந்து வருகிறார்.
சம்பவத்தன்று 51 மாணவர்களை பேருந்து ஒன்றில் உடற்பயிற்சி கூடம் ஒன்றிற்கு அவர் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பயண நேரத்தில் மாணவர்களை அச்சுறுத்திய அவர், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
மேலும் மாணவர்களின் மொபைல் போன்களையும் கைப்பற்றிய அவர், மாணவர்களின் கைகளையும் கட்டி துன்புறுத்தியுள்ளார்.
பின்னர், யாரும் உயிருடன் இன்று தப்ப முடியாது என கொக்கரித்த அவர், பெட்ரோல் நிரப்பிய டப்பாவை மாணவர்களுக்கு காட்டியுள்ளார்.
இதனிடையே சுதாரித்துக் கொண்ட மாணவர்களில் ஒருவர், வாய்த்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மொபைல் போனில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மிலன் நகர பொலிசார் குறித்த வாகனத்தை போராட்டத்தின் நடுவே தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் திடீரென்று பெட்ரோல் டப்பாவை திறந்து பேருந்தில் ஊற்றி பின்னர் நெருப்பு வைத்துள்ளார்.
இதனிடையே பேருந்தின் பின்னால் அமைந்துள்ள அவசர வாசலை உடத்தை மாணவர்களை பொலிசார் காப்பாற்றியுள்ளனர்.
இச்சம்பவத்தில் மாணவர்கள் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும், ஆனால் ஒருசிலருக்கு பேருந்து நெருப்பு மூட்டியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பேருந்து ஓட்டுநரை கைது செய்த பொலிசார், அவர் மீது படுகொலை மற்றும் ஆட்கடத்தல் பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.
51 மாணவர்களுடன் பாடசாலை பேருந்துக்கு தீ வைத்த நபரால் பரபரப்பு: அதிர்ச்சி சம்பவம் -
Reviewed by Author
on
March 21, 2019
Rating:
No comments:
Post a Comment