பண்டிகை கொண்டாட்டத்தில் தலைகீழாக கவிழ்ந்த படகு.. 94 பேர் பலி!
உலகம் முழுவதும் நேற்றைய தினம் குர்தீஷ் உள்ளிட்ட பல்வேறு இன மக்களால் வசந்தத்தை வரவேற்கும் நவ்ரூஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஈராக் நாட்டில் இந்த பண்டிகை புது வருடமாக கொண்டாடப்படுகிறது.
இதற்காக மொசூல் நகரில் இருந்து டைகிரிஸ் நதியில் 200 பேர் படகில் பயணித்துள்ளனர். 80 பேர் வரை மட்டுமே சராசரியாக செல்லக்கூடிய அந்த படகில், 200 பேர் சென்றுள்ளனர்.
இந்நிலையில், படகில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அப்படியே தலைகீழாக நதியில் கவிழ்ந்தது. அதில் பயணித்த மக்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். தலைகீழாக படகு கவிழ்ந்ததால் பலர் சிக்கிக்கொண்டனர்.
இதனால் 94 பேர் பரிதாபமாக பலியாகினர். மீதம் உள்ளவர்களில் 54 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஏஞ்சியவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. எனினும், மீட்புப்பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்டிகை கொண்டாட்டத்தில் தலைகீழாக கவிழ்ந்த படகு.. 94 பேர் பலி!
Reviewed by Author
on
March 22, 2019
Rating:
No comments:
Post a Comment