அண்மைய செய்திகள்

recent
-

அலங்கார வளைவை உடைத்தவர்களை- உடன் கைது செய்ய உத்தரவு!!

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைப்பில் ஈடுபட்டவர்களை உடன் கைது செய்யுமாறு மன்னார் மாவட்ட நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கடந்த சிவராத்திரி திருவிழாவிற்காக திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு செல்லும் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த அலங்கார வளைவு சில  கத்தோலிக்க மக்களால் பங்கு தந்தை முன்னிலையில்  உடைத்து அகற்றப்பட்டது உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அப்பொழுது
உடைப்பு சம்பவத்தில்  ஈடுபட்ட நபர்களை பொலிஸ் கைது   செய்யவில்லை எனவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்  சட்டத்தரணி விநோதனும்  கங்காதரனும் வாதாடினர்
 சந்தேகநபர்களை கைது செய்யுமாறும் வீடியோ போட்டோ ஆதாரங்களை பாதிக்கப்பட்டவர்களிடம் பெறுமாறும் நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் ரி.சரவணராஜா உத்தரவிட்டார்.






அலங்கார வளைவை உடைத்தவர்களை- உடன் கைது செய்ய உத்தரவு!! Reviewed by Admin on March 08, 2019 Rating: 5

1 comment:

Ramany Soma said...

இந்த மதச் சண்டைகளைப் பார்க்கும் போது உலகில் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள் இருப்பது போலத் தோன்றுகிறது. அந்தக் கடவுளர் தமக்குள் அடிபட்டுக் கொள்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது. மதங்களின் பெயரால் மனிதகுலம் பிரிந்து, சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறது.

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.