வழுக்கையில் மீண்டும் முடி வளர வேண்டுமா?
இதற்கு இன்று பல நவீன முறை சிகிச்சைகள் மருந்துகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும் நம் முன்னோர்களின் அந்தகாலத்தில் அதுவும் கொத்தமல்லி இலையை வைத்தே நம்மால் இழந்த முடியை மீண்டும் பெற்றனர் என்று சொல்லப்படுகின்றது.
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொத்தமல்லியில் உள்ளது. உடல் நலத்திற்கு எப்படி இது உதவுகிறதோ அதே போன்று முடியின் ஆரோக்கியத்திற்கும் கொத்தமல்லி சிறப்பாக பயன்படுகிறது.
அதுமட்டுமின்றி கொத்தமல்லி எண்ணெய்யும் இழந்த இடத்தில் முடி வளர சிறந்த மருந்தாக கருதப்படுகின்றது.
தற்போது கொத்தமல்லி எண்ணெயை கொண்டு வழுக்கை தலையில் எப்படி முடிவளர செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி - 1 கைப்பிடி
- ஆலிவ் எண்ணெய்- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் கொத்தமல்லியை அரைத்து கொள்ளவும். அதன்பின் இதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொண்டு தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை முடியின் வேரில் தடவி 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும். அதன்பின் தலைக்கு குளிக்கலாம். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வந்தாலே வழுக்கையில் மீண்டும் முடி வளரும்.
வழுக்கையில் மீண்டும் முடி வளர வேண்டுமா?
Reviewed by Author
on
March 08, 2019
Rating:
No comments:
Post a Comment