37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில், நடப்பாண்டில் இதுவரை தோற்கடிக்கப்படாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 170 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 59 ரன்கள் எடுத்தார்.
சென்னை அணி சார்பில் வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், மோகித் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வந்த வேகத்திற்கு நடையை கட்டியதால், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 58 ரன்களை குவித்திருந்தார்.
37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!
Reviewed by Author
on
April 04, 2019
Rating:
No comments:
Post a Comment