அண்மைய செய்திகள்

recent
-

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! ரணிலை கைது செய்ய முயற்சி?


புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டில் முக்கிய சம்பவம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை.

எனினும், இந்த சம்பவம் குறித்து அலரி மாளிகையில் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. குறிப்பாக சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, புத்தாண்டில் அரசாங்கத்​தை கலைப்பதாகவும், பிரதமர் அல்லது அமைச்சர்களை கைது செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அங்கிருந்த பலரையும் திகைப்பில் ஆழ்தியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும், இதற்கு பதிலளித்து பேசிய இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,

“அது செய்தியாளர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடிய போது கூறிய கதையாகும். புதிய தகவல்கள் செய்தியாளர்கள் கேட்டபோது, புத்தாண்டு பிறக்கும்போது, நல்​லதொன்று நடக்கும் பாருங்கள்” என ஜனாதிபதி கூறியுள்ளார்.
அந்த கதைதான், இவ்வாறு பரவியிருக்கின்றது என” இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! ரணிலை கைது செய்ய முயற்சி? Reviewed by Author on April 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.