அண்மைய செய்திகள்

recent
-

பிறந்திரிச்சு சித்திரை...

 பிறந்திரிச்சு சித்திரை...

பிறந்தது சித்திரை
பறந்த நித்திரை
மறந்திடுங்கள் துக்கத்தை
திறந்திடுங்கள் மனதை

தை போக வந்திருக்கு சித்திரை
கதை சொல்ல ஓடுது கனவுக்குதிரை
எதை முதல் சொல்ல உரை-தமிழ்
சதையெங்கும் நுரை

நரை விழுந்த பின்பும்
பரம்பரைக்கு- சொத்து
இரை தேடும் மெத்த படித்த மேதாவிகளே-வாழ்வின்
கரை தெரியாமல் எம்மினத்தின்  உணர்வோடு

கதிரை சண்டை முடிந்தது
இரை தேடும் கூட்டம்-தமிழ் உரிமையில்
திரை போட்டு தினமும் ஆடுது
சதிராட்டம் தவசிவேடத்தில்

பட்டாடை பட்டாசு
புதுப்பானை பொங்கலிட்டு
செங்கரும்போடு சேர்ந்து
தித்திதிப்பாய் திங்கும் போதுகூட

காணாமல் போன.....
சிறையில்  வாடுகின்ற....
சின்னஞ்சிறுகள் தாயும் தந்தையும் இன்றி
தனிமையில்வாடுகின்ற இன்னும் எத்தனை உறவுகள்

எம்மத்தியில் வாழ்கின்றபோது
எம் புத்தியில் ஏன்........
சித்தப்பிரமை பிடித்து போல
சத்தமின்றி முத்தமிடுகின்றோம்
சலுகைகளையும் சல்லாபங்களையும்

சந்திக்கும் போது
சிந்திக்கும் படி பேசி
முந்திக்கொள்கின்றோம்-உயர்
பந்திக்கும் பந்திக்கும்.....

எப்போது  விடுதலை என்று
ஏங்குகின்றபோது-உறவுகள்
எம் எண்ணத்தில் என்னவோ
எனி கொண்டாட இருக்கும் தீ.........
என்றும் தீராத வலிகளோடு
வழிந்தோடும் கண்ணீரோடு


கவிஞர்-வை-கஜேந்திரன் -




பிறந்திரிச்சு சித்திரை... Reviewed by Author on April 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.