அண்மைய செய்திகள்

recent
-

சென்னை அணியிடம் படுதோல்வி! தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறிய காரணம் -


பவர் ப்ளேயில் 4 விக்கெட்டுகள் என்பது தான் பின்னடைவாக அமைந்ததாக கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கொல்கத்தா-சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டம், எந்த சுவாரஸ்யமும் இன்றி முடிந்தது ரசிகர்களை வெறுப்படையச் செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றாலும், சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து அணித்தலைவர் டோனி கடும் அதிருப்தி தெரிவித்தார்.
இந்நிலையில் கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக், நான்கு விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாக அமைந்தது என்றும், ஆந்த்ரே ரஸலின் ஆட்டம் முதிர்ச்சியான இன்னிங்ஸ் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘நிச்சயமாக ஓட்டங்கள் போதாது. இத்தகைய ஆட்டங்கள் கொஞ்சம் ட்ரிக்கி ஆனது தான். எது நல்ல ஸ்கோர் என்று தீர்மானிக்க முடியாத ஆட்டம். பனிப்பொழிவு உள்ளிட்டவை இருக்கின்றன.
எப்போதும் இன்னும் கொஞ்சம் கூடுதல் ஓட்டங்கள் தேவை என்ற எண்ணத்தைத் தடுக்க முடியாது. பவர் ப்ளேயில் 4 விக்கெட்டுகள் கண்டிப்பாக பின்னடைவுதான். ஆனால், ரஸல் முதிர்ச்சியுடன் ஆடியதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

மிகக் குறைந்த இலக்கைத் தடுக்கும்போது சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக வீசினர். இதில் எனக்கு திருப்தி. துடுப்பாட்ட வீரர்களிடம் கவனம் இல்லை என்று கூறுவதற்கில்லை. 2 வாரங்கள் நாங்கள் ரோட்டில்தான் இருந்தோம்.
ஒரு இரவு மறக்கப்பட வேண்டிய இரவாகி விட்டது. மறப்போம். அடுத்தப் போட்டி புதிய போட்டி, புதிய தினம்’ என தெரிவித்துள்ளார். ஆனால், ஆடுகளம் குறித்து அவர் எதுவும் கருத்து கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணியிடம் படுதோல்வி! தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறிய காரணம் - Reviewed by Author on April 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.