அண்மைய செய்திகள்

recent
-

தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் முதலிடம் பிடித்த நாடு: உலக வங்கி தகவல் -


வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதாக உலக வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தாய்நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புகின்றனர்.
இவ்வாறு தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் கடந்த ஆண்டில் மட்டும் 79 பில்லியன் டொலர் பணம் அனுப்பி உள்ளனர்.
இந்தியாவைத் தொடர்ந்து சீனா 2வது இடத்தில் உள்ளது. வெளிநாடுகளில் உள்ள சீனர்கள் தாய்நாட்டிற்கு 67 பில்லியன் டொலர்கள் அனுப்பி உள்ளனர்.
மெக்சிகோ 36 பில்லியன் டொலர்களுடன் 3வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 34 பில்லியன் டொலர்களுடன் 4வது இடத்திலும், எகிப்து 29 பில்லியன் டொலர்களுடன் 5வது இடத்திலும் உள்ளன.
தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து வெளிநாட்டில் பணியாற்றும் மக்கள் 2018 ஆம் ஆண்டு மட்டும் 131 பில்லியன் டொலர்கள் அளவுக்கு பணம் தாய்நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு பணம் வருவது கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
2016ம் ஆண்டு 62.7 பில்லியன் டொலர்களும், 2017ம் ஆண்டு 65.3 பில்லியன் டொலர்களும் பணம் வந்தது குறிப்பிடத்தக்கது.

தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் முதலிடம் பிடித்த நாடு: உலக வங்கி தகவல் - Reviewed by Author on April 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.