டோனி இல்லாமல் மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்..
ஐபிஎல் தொடரின் 33-வது லீக் போட்டியில் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்ததால், அந்தணிக்கு துவகக் வீரர்களாக வாட்சன் மற்றும் டூபிளிசிஸ் களமிறங்கினர்.
இருவரும் சிறப்பான துவக்கத்தை கொடுத்து வந்த நிலையில் வாட்சன் 31, டூப்ளிசிஸ் 45 என வெளியேற அடுத்து வந்த வீரர்களில் சுரேஷ் ரெய்னா 13, கீதர் ஜாதவ் 1, சாம் பில்லிங்ஸ் டக் அவுட்டாக சென்னை அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் எடுத்தது.
இதில் அம்பத்தி ராயுடு மட்டும் 25 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் ரஷுத் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 133 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஹைதராபாத் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக வார்னரும், பேர்ஸ்டோவ்வும் ஆடினர். வார்னர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த வீரர்களான வில்லியம்சன் (3) விஜய் சங்கர் (7) தீபக் ஹூடா (13) ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்து வந்தார்.
அதன் பின் வந்த யூசுப் பதான், பேர்ஸ்டோவ்வுடன் ஜோடி சேந்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 16.5 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 137 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் 61 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
இப்போட்டியில் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், சென்னை அணி இப்படி ஒரு மோசமான தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
டோனி இல்லாமல் மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்..
Reviewed by Author
on
April 18, 2019
Rating:
No comments:
Post a Comment