அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் முன்பள்ளி சிறுவர்களுக்கான 'அருண தகின ரடா' சித்திர ஆக்க நிகழ்ச்சி மற்றும் மதிப்பிடல் நிகழ்வு-(படம்)

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முன்பள்ளி சிறுவர்களுக்கான 'அருண தகின ரடா' சித்திர ஆக்க நிகழ்ச்சி மற்றும் மதிப்பிடல் நிகழ்வு  திங்கட்கிழமை 08-04-2019 காலை அடம்பன் றோ.க.த.க.ஆரம்ப பாடசாலையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ். கேதீஸ்வரன், உதவி பிரதேசச் செயலாளர்  ச.யசிந்தன், மாந்தை மேற்கு பிரதேச செயலக சிறுவர்,மகளிர் பிரிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த   நிகழ்வில் சிறுவர்களினால்   வரையப்பட்ட சித்திரங்கள்   காட்சிப் படுத்தப்பட்டது.

-இதன் போது தெரிவு செய்யப்பட்ட முன் பள்ளி மாணவர்களுக்கு மானவர்களுக்கான பரிசில்களும்,சான்றிதல்களும் விருந்தினர்களினால் வழக்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் முன்பள்ளி சிறுவர்களுக்கான 'அருண தகின ரடா' சித்திர ஆக்க நிகழ்ச்சி மற்றும் மதிப்பிடல் நிகழ்வு-(படம்) Reviewed by Author on April 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.