அண்மைய செய்திகள்

recent
-

பற்றியெரிந்த நோட்ர-டாம் தேவாலயம்! தீப்பிழம்பின் நடுவே தெரிந்த இயேசு கிறிஸ்து?


பாரிசில் அமைந்துள்ள 850 ஆண்டுகள் பழமையான நோட்ர-டாம் தேவாலயத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாரிய தீவிபத்து ஏற்பட்டிருந்தது.

இது உலக மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், தீவிபத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நோட்ர-டாம் தேவாலயம் தீயில் எரிந்துகொண்டிருந்த போது எடுக்கப்பட்ட குறித்த புகைப்படத்தில் தீப்பிழம்பின் நடுவே இயேசு கிறிஸ்து தோன்றியதாக கூறப்படுகின்றது. இது குறித்த புகைப்படங்களை பிரித்தானியாவை சேர்ந்த Lesley Rowan என்ற பெண் வெளியிட்டுள்ளதுடன், தீப்பிழம்பின் நடுவே இயேசு கிறிஸ்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த புகைப்படம் வைரலாகியுள்ளதுடன், இது குறித்த செய்தியும் சர்வதேச ஊடங்களில் முதன்மைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பற்றியெரிந்த நோட்ர-டாம் தேவாலயம்! தீப்பிழம்பின் நடுவே தெரிந்த இயேசு கிறிஸ்து? Reviewed by Author on April 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.