அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் படகில் கைது செய்யப்பட்ட நைஜிரியா பிரஜைகள் தொடர்ந்து விளக்கமறியலில்

குடிவரவு குடியகல்வு சட்டத்துக்கு மாறாக தலைமன்னார் கடல் மார்க்கமாக
இந்தியாவுக்கு செல்ல முனைந்ததாக  நான்கு நைஜிரியா நாட்டைச்
சேர்ந்தவர்களும் ஒரு படகின் மூலம் இவர்களை கடத்தி செல்ல முனைந்ததாக இரு இலங்கை பிரஜைகளும் சம்பந்தமான வழக்கில் இவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் பதில் நீதவான் இம்மானுவேல கயஸ் பல்டானோ கட்டளை பிறப்பித்துள்ளார்.

நான்கு நைஐPரியா நாட்டைச் சேர்ந்தவர்களையும் மன்னார் உதயபுரம்
கிராமத்தைச் சேர்ந்தவர்களையும் கடந்த 31.03.2019 அன்று தலைமன்னார்
கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்புக்குள் ஒரு படகுடன்  கைது செய்து
தலைமன்னார் பொலிசில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மன்னார் நீதிமன்றில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கைக்கு வருகை தந்திருந்த நான்கு நைஜிரியா பிரஜைகள் கடவுச் சீட்டு
அற்ற நிலையில் தலைமன்னார் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பியோட
முனைந்ததாகவும் இவர்களை ஒரு படகில் ஏற்றிச் செல்ல முற்பட்டதாக  இலங்கை பிரஜைகளான பேசாலை உதயபுரத்தைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்ட  நிலையிலேயே இவர்கள் மன்னார் நீதிமன்றில் ஆஐர்படுத்தப்பட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான வழக்கு செவ்வாய் கிழமை (16.04.2019) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்றபொழுது சிறைச்சாலை அதிகாரிகள் இவர்களை மன்னார் பதில் நீதவான் இம்மானுவேல கயஸ் பல்டானோ முன்னிலையில் ஆஐர்படுத்தினர்.

இவர்களை எதிர்வரும் 22.04.2019 திங்கள் கிழமை வரை தொடர்ந்து
விளக்கமறியலில் வைக்கும்படி பதில் நீதவான் இம்மானுவேல் கயஸ் பல்டானோ கட்டளை பிறப்பித்தார்.

இவ் வழக்கின்போது இந்த ஆறு சந்தேக நபர்கள் சார்பாக மன்னார் சிரேஷ்ட்ட
சட்டத்தரணிகள் பா.டெனிஸ்வரன், ரி.வினோதன் மற்றும் செல்வராஜா டினேஷன் ஆகியோர் ஆஐராகியிருந்தனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் படகில் கைது செய்யப்பட்ட நைஜிரியா பிரஜைகள் தொடர்ந்து விளக்கமறியலில் Reviewed by Author on April 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.