மன்னாரில் தேசிய துக்க தினம் அனுஸ்ரிப்பு-படங்கள்
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று செவ்வாய்க்கிழமை 23-04-2019 காலை 8.30 மணிக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடணப்படுத்தியுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தேசிய துக்க தினம் இன்று செவ்வாய்க்கிழமை அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதோடு, அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் மாவட்டச்செயலகத்தில் காலை 8.30 மணி முதல் 8.33 மணி வரையிலான மூன்று நிமிடங்கள் துக்கதினம் அனுஸ்ரிக்கப்பட்டதோடு,மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் மாவட்டச்செயலக பணியாளர்களும் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதோடு,தேசிய துக்கதினம் அனுஸ்ரிக்கப்பட்டது.
மேலும் மன்னார் பஸார் பகுதியில் உள்ள பல்வேறு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு,வர்த்தக நிலையங்களில் கறுப்புக்கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளதோடு,பஸார் பகுதியில் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளது.
அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் தேசிய துக்க தினம் அனுஸ்ரிப்பு-படங்கள்
Reviewed by Author
on
April 23, 2019
Rating:
No comments:
Post a Comment