அண்மைய செய்திகள்

recent
-

11 பேர் பலி -பிரேசில் நாட்டில் 7 மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கி சூடு:


பிரேசில் நாட்டில் பார் ஒன்றில் 7 துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் பார் உரிமையாளர் உட்பட 11 பேர் பலியாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரேசில் நாட்டின் பெலேம் நகரம் அருகே இயங்கி வரும் பார் ஒன்றில் 7 மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் பார் உரிமையாளர் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன. பார் உரிமையாளரின் பெயர் Maria Ivanilza Pinheiro Monteiro என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து 5 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விரைந்த பொலிஸ் அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு தாக்குதல்தாரி மட்டும் குண்டடி காயங்களுடன் பொலிஸாரிடம் சிக்கியிருப்பதாகவும், மற்ற நபர்கள் தப்பியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

11 பேர் பலி -பிரேசில் நாட்டில் 7 மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கி சூடு: Reviewed by Author on May 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.