அண்மைய செய்திகள்

recent
-

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு காணி வழங்கியுள்ள அமைச்சர் -


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு இலங்கை துறைமுக அதிகார சபையினால் காணி கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று முற்பகல் காணி பத்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையிடம் அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆலய விஸ்தரிப்பின் பொருட்டு இலங்கை துறைமுக அதிகாரச் சபைக்குச் சொந்தமான 06 பெர்சஸ் காணிக்கான பத்திரத்தை வழங்கி வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி கர்தினால் பர்னாந்து பிலோமி ஆண்டகை மற்றும் இந்நாட்டு முன்னணி அரசியல்வாதிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு காணி வழங்கியுள்ள அமைச்சர் - Reviewed by Author on May 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.