அண்மைய செய்திகள்

recent
-

கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை -


பாடசாலைகளில் மாணவர்களின் வருகையை குறைக்கும் வகையில் பாதுகாப்பு தொடர்பான போலி பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாணவர்களின் வருகையை கவனத்தில் கொள்ளாது அனைத்து ஆசிரியர்களையும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க அறிவித்துள்ளார்.
மாணர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வருகையில் காணப்படும் குறைபாடு காரணமாக பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பாடசாலைக்கு சமூகமளிக்கும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை - Reviewed by Author on May 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.