அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-முள்ளிவாய்கால் நினைவேந்தலையொட்டி மர நடுகை நிகழ்வு-படங்கள்

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதி யுத்ததில் முள்ளிவாய்கால் பகுதியில் உயிர் நீத்த   மக்களின் 10 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அணுசரனையில் வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்களுக்கும் வைத்திய சாலைகளுக்கும் மரக்கண்றுகள் வழங்கும் நிகழ்வு மற்றும் மரங்கள் நடும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை 17-05-2019 இடம் பெற்றது.

யுத்தத்தில் இறந்த எமது மக்களின் நினைவு தினத்தை அர்தம் உள்ளதாக்கும் வகையில் அவர்களுக்காக ஒரு மரத்தினை நாட்டி அதை வளர்ப்பதன் மூலம் அவர்களின் நினைவினை பயன் உள்ளதாக்க முடியும் என்பதன் அடிப்படடையில் குறித்த மரக்கண்றுகள் வழங்கப்படுகின்றது.

குறிப்பாக மன்னார் , வவுனியா , கிளிநொச்சி, முல்லைதீவு , மட்டக்களப்பு,  திருகோணமலை ,அம்பாரை, ஆகிய தமிழர் வாழும் பகுதிகளின் மரங்கள் வழங்கப்பட்டு நடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை 17-05-2019இடம் பெற்றது.

இன்று 17-05-2019 கிளிநொச்சி பகுதியில் உள்ள சில பாடசாலைகள் மற்றும் மீனவர் சமாசம் உட்பட பூநகரி பிரதேச வைத்திய சாலையிலும் மரம் நடும் நிகழ்வு இடம் பெற்றமை  குறிப்பிடதக்கது.
 












மன்னார்-முள்ளிவாய்கால் நினைவேந்தலையொட்டி மர நடுகை நிகழ்வு-படங்கள் Reviewed by Author on May 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.