அண்மைய செய்திகள்

recent
-

விஜயகலா அன்று விடுதலைப் புலிகள் தொடர்பில் கூறியதில் என்ன தவறு இருக்கின்றது? ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா -


நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தண்டணைச் சட்டக்கோவை 120 பிரிவின் படி தண்டணை வழங்கக் கூடிய குற்றத்தை புரிந்துள்ளார் என பொலிஸாரால் விஜயகலா மகேஸ்வரன் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கானது எதிர்வரும் 26ம் திகதி ஆடிமாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

2018 ஆண்டு ஆடி மாதம் 2ம் திகதி யாழப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்ற அரச வைபவத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தண்டணைச் சட்டக்கோவை 120 பிரிவின் படி தண்டணை வழங்கக் கூடிய குற்றத்தை புரிந்துள்ளார் என பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனது சமர்பணத்தில்,
2018ம் ஆண்டு ஆடி மாதம் 2ம் திகதி யாழ்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்ற அரச வைபவத்தில் நாட்டின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் முன்னிலையில் விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரையில் வடக்கில் சட்டம் ஒழுங்கு சீராக செயல்படுத்தப்படாமையால் பல கொலை, கொள்ளைகள் நடைபெறுவதுடன், 5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தை போன்ற நிர்வாகம் இருந்திருந்தால் இவ்வாறான குற்றச் செயல்கள் நடைபெற மாட்டாது என்பதையே குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றியதாக அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த உரையின் உள்ளடக்கத்தை கவனத்தில் எடுத்து பாதுகாப்பு அமைச்சு முறையாக செயற்பட்டிருக்குமானால் இன்றைய நாட்டின் நெருக்கடி சூழ் நிலை அனர்த்தங்களைக் கூட தடுத்திருக்கலாம்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதா?அல்லது விடுதலை செய்வதா என்பதைத் தீர்மானிக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இந்த வழக்கின் கோவைகள் அனுப்பப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரை தொடர்புகொண்டு இந்த வழக்குக்கோவை சம்பந்தமாக உரையாடியுள்ளோம். என் சமர்பனத்தில் கூறியதையடுத்து சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவதற்காக இந்த வழக்கு 26ம் திகதி ஆடிமாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விஜயகலா அன்று விடுதலைப் புலிகள் தொடர்பில் கூறியதில் என்ன தவறு இருக்கின்றது? ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா - Reviewed by Author on May 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.