அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் 10113 சமுர்த்தி பயணாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கி வைப்பு-படங்கள்

மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 10 ஆயிரத்து 113 சமுர்த்தி பாயணாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வைபவ ரீதியாக வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(9) மாலை 2.45 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில்  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

-குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே,விருந்தினர்களாக  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான றிஸாட் பதியுதீன்,சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் அமைச்சின் அதிகாரிகள் சர்வமத தலைவர்கள் உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான சமுர்த்தி பயணாளிகளும் வருகை தந்திருந்தனர்.

-இதன் போது அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டதோடு மங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

-குறித்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம் பெற இருந்த நிலையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்த நிலையில், அமைச்சர் தயாகமகே குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட நிலையில்,மன்னாரில் இடம் பெற இருந்த குறித்த நிகழ்வு தாமதித்து இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.













மன்னார் 10113 சமுர்த்தி பயணாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கி வைப்பு-படங்கள் Reviewed by Author on June 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.