ஏழைகளின் தோழனாக விளங்கிய அமரர் அருட்பணி எஸ்.வி.அவிதப்பர் அடிகளாருக்கு அஞ்சலி.
மன்னார் மறைமாவட்டத்தில் பல பங்குகளில் பங்கு தந்தையாக இருந்து பின்
பேசாலையில் பங்கு தந்தையாகவும் அனைவருடனும் அன்பும் இரக்கமும் குறிப்பாக ஏழைகள் மட்டில் அன்பும், பாசமும் ஏழைகள் மட்டில் வாரி வழங்கும் ஒரு அருட்பணியாளராக வாழ்ந்து உயிர்நீத்த அருட்பணி எஸ்.வி.அவிதப்பர் அடிகளார் இறைவனடிச் சேர்ந்து நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திங்கள் கிழமை (24.06.2019) பேசாலை மன்.புனித மரியாள் வித்தியாலத்தில் அஞ்சலி நிகழ்வு மாணவர்கள் ஆசிரியர்களால் நிகழ்த்தப்பட்டது.
இவ் பாடசாலை அதிபர் எஸ்.இராஜேஸ்வரன் பச்சேக் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வுக்கு பிரதம மற்றும் விஷேட அதிதிகளாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளார், பேசாலை பங்கு மற்றும் உதவிப் பங்கு தந்தையர் அருட்பணியாளர்கள் ச.தேவராஐh கொடுதோர், ரஞ்சன் சேவியர் அடிகளார்கள், மன்னார் கல்வி வளைய உதவி கல்விப் பணிப்பாளர் பி.ஞானராஐ; ஆகியோர் கலந்து கொண்டு மறைந்த அருட்பணியார் எஸ்.வி.அவிதப்பருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் அடிகளாரின் ஞாபகர்த்தமாக வறுமை கோட்டுக்குள் வாழும்
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
ஏழைகளின் தோழனாக விளங்கிய அமரர் அருட்பணி எஸ்.வி.அவிதப்பர் அடிகளாருக்கு அஞ்சலி.
Reviewed by Author
on
June 25, 2019
Rating:
No comments:
Post a Comment