வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்! - சுமந்திரன், விஜயகலாவும் பங்கேற்பு -
யாழ். மாவட்டம், வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று மருதங்கேணி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
மருதங்கேணி பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இணைத்தலைவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.சா. அரியகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
அத்துடன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன், கே.சயந்தன், பருத்தித்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் கு.தினேஷ், பருத்தித்துறை பிரதேச சபையின் வடமராட்சி கிழக்கு வட்டாரங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மதத் தலைவர்கள், கல்வி அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி கிழக்கின் அபிவிருத்திகள் தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்! - சுமந்திரன், விஜயகலாவும் பங்கேற்பு -
Reviewed by Author
on
June 17, 2019
Rating:
No comments:
Post a Comment