அண்மைய செய்திகள்

recent
-

தற்கொலை குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட நீர் கொழும்பு கட்டுவப்பிட்டி ஆலய பங்கு மக்கள் மன்னார் விஜயம்-(படம்)

தற்கொலை குண்டு தாக்குதலில் பாதீக்கப்பட்ட நீர் கொழும்பு கட்டுவப்பிட்டி ஆலய பங்கு மக்கள் மன்னார்  07-06-2019 வெள்ளிக்கிழமை மாலை மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது நீர் கொழும்பு கட்டுவப்பிட்டி ஆலய பங்கு மக்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

-இந்த நிலையில் குறித்த மக்கள் உடல் ரீதியாகவும் , உள ரீதியாகவும் பாதிப்பை எதிர் கொண்ட நிலையில்டி பல்வேறு தன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த மக்கள்  மனதளவில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடும் நோக்கில் 'ஆற்றுப்படுத்தல்' பயண மொன்றை மேற்கொண்டு  07-06-2019  வெள்ளிக்கிழமை  மாலை மன்னார் மறை மாவட்ட திருத்தளங்களை தரிசிக்க ,இரண்டு நாள் பயணத்தை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு மறைமாவட்ட விசுவாசத்தைப் பரப்பும் அமைப்பின் பொறுப்பாளர் அருட் தந்தை பிரசாத் கர்ஸண்  அடிகளாரின்   வழி நடத்துதலில் குறித்த அமைப்பினர் மன்னார் மறைமாவட்டத்தின் மடுத் திருத்தளம், மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம் , மன்னார் தோட்டவெளி மறை சாட்சிகளின் இராக்கினி ஆலயம்   போன்ற யாஸ்திரீக தளங்களுக்குச் சென்று ,இறை வழிபாட்டில் ஈடுபட்டதுடன் அப்பகுதி பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது நிலையினருடனும் உரையாடல்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.



தற்கொலை குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட நீர் கொழும்பு கட்டுவப்பிட்டி ஆலய பங்கு மக்கள் மன்னார் விஜயம்-(படம்) Reviewed by Author on June 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.