அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டிச்சவாரி போட்டி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி நேற்று சனிக்கிழமை 08-06-2019 மாலை மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரிகாரி கண்டல் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் இடம் பெற்றது.

குறித்த போட்டியில் மொத்தமாக 21 சேடி காளைகள் பங்குபற்றின. A,B,C,D  ஆகிய நான்கு பிரிவுகளாக போட்டிகள்  இடம் பெற்றது.

இப் போட்டியில் மன்னார் மாவட்ட காளைகளின் சொந்தக்காரர்கள் மற்றும் யாழ் மாவட்ட காளைகளின் சொந்தக்காரர்களும் போட்டியில் பங்கு பெற்றினர்.

இப்போட்டியில் நான்கு பிரிவுகளிலும் மன்னார் மாவட்ட காளைகளின் உரிமையாளர்கள் முதலிடத்தை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.









தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டிச்சவாரி போட்டி Reviewed by Author on June 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.