அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பொசன் போயா தினத்தையொட்டி இடம் பெற்ற கடலை தானம் வழங்கும் நிகழ்வு-(படம்)

நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) பொசன் போயா தினம் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.

இதனையொட்டி விசேட அன்னதான சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் விகாரைகள் மற்றும் கோயில்களில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம் பெற்று வருகின்றன.

இந்த நிலையில் பொசன் போயா தினத்தையொட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை16-06-2019காலை மன்னாரில் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் கடலை தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

 மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிரதான பாலத்தடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் கடலை தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க தலைமையில் இடம் பெற்ற குறித்த தானம் வழங்கும் நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் கலந்து கொண்டு ஆசி வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து கடலை தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.



மன்னாரில் பொசன் போயா தினத்தையொட்டி இடம் பெற்ற கடலை தானம் வழங்கும் நிகழ்வு-(படம்) Reviewed by Author on June 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.