அண்மைய செய்திகள்

recent
-

ஐரோப்பிய நாடொன்றில் மோசமான நிலையில் உயிரிழந்த இலங்கையர் -


இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற விபத்தில் வெரோனா நகரில் பணி செய்து வந்த இலங்கையரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இலங்கையில் நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான துஷார சஞ்சீவ பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த இலங்கையர் பயணித்த மோட்டார் வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் வீதியில் வாகனத்தை நிறுத்திய போது பின்னால் வந்த பேருந்து அதனை மோதியமையினால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த இலங்கையர் அம்பியுலன்ஸ் வண்டியின் உதவி ஊடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வெரோனா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐரோப்பிய நாடொன்றில் மோசமான நிலையில் உயிரிழந்த இலங்கையர் - Reviewed by Author on June 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.