அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிட பகுதியில் அமைந்துள்ள புத்தக மொத்த விற்பனை நிலையம் தீ 7 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசம்-(படம்)


இரண்டாம் இணைப்பு.........

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிட பகுதியில் அமைந்துள்ள புத்தக மொத்த விற்பனை நிலையம் ஒன்று இன்று வியாழக்கிழமை (25) காலை 5 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.

குறித்த விற்பனை நிலையம் முழுமையாக எரிந்து சாம்பளாகியுள்ளது. சுமார் 7 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

-வழமை போல் நேற்று புதன் கிழமை (24) இரவு குறித்த விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 5 மணியளவில் மூடப்பட்டிருந்த குறித்த விற்பனை நிலையத்தினுள்  இருந்து தீ மற்றும் புகை வெளி வருவதை அவதானித்தவர்கள் உடனடியாக குறித்த விற்பனை நிலைய உரிமையாளருக்கு தகவல் வழங்கினர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து தீயை அனைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, மன்னார் பொலிஸாருக்கும், மன்னார் நகர சபைக்கும் தெரியப்படுத்தினர்.

இந்த நிலையில் மன்னார் நகர சபை மற்றும் இராணுவத்தினர் பௌசர் வாகனம் மூலம் நீர் கொண்டு வந்து தீயை அனைக்க நடவக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.எனினும் குறித்த விற்பனை நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களுமே எரிந்து சாம்பளாகி உள்ளது.

தீ அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பரவாத வகையில் தீ முழுமையாக அனைக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

மின் ஒழுக்கா?அல்லது திட்டமிட்ட சதியாக என்பது தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்க மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்துக்களை தொடர்ந்து மன்னார் மாவட்டத்திற்கு அவசரமாக தீ அனைப்பு வாகனம் தேவை என்பதனை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்ததோடு, அமைச்சர்கள்,பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.

இந்த நிலையில் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக மன்னார் மாவட்டத்திற்கு தீ அனைப்பு வாகனம் வழங்குவதாக உறுதி மொழி வழங்கினார்.

ஆனால் மாதங்கள் பல கடந்த போதும் பிரதமரின் உறுதி மொழி இது வரை நிறைவேற்றப்படவில்லை எனவும், தீ அனைப்பு வாகனம் இருந்திருந்தால் குறித்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விற்பனை நிலையத்தில் இருந்த பொருட்களை பாதுகாத்திருக்க முடியும் என வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிட பகுதியில் அமைந்துள்ள புத்தக மொத்த விற்பனை நிலையம் தீ 7 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசம்-(படம்) Reviewed by Author on July 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.