அண்மைய செய்திகள்

recent
-

கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவருக்கு அபராதத்துடன் சமூக சீர்திருத்த நிகழ்ச்சி திட்டத்தில் கலந்து கொள்ள நீதிபதி உத்தரவு...

சட்ட விரோதமாக தன் உடமையில் கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவருக்கு மன்னார் மாவட்ட, நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேஸ்ராஜா அபராதம் விதித்ததுடன் நூறு மணித்தியாலங்கள் சமூதாய சீர்திருத்த நிகழ்ச்சி
திட்டங்களில் பங்குப்பற்ற வேண்டும் என்று கட்டளை பிற்ப்பித்தார்.

நேற்று முன்தினம் திங்கள் கிழமை (08.07.2019) மன்னார் அடம்பன் பகுதியைச்
சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பொலிசார் மன்னார் மாவட்ட, நீதவான்
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஒன்றை செய்திருந்தனர்.

இவ் நபர் சட்டபூர்வமற்ற முறையில் தன்வசம் 3500 மில்லிக் கிராம் கஞ்சா
வைத்திருந்ததாகவே இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மன்னார் மாவட்ட, நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா
முன்னிலையில் ஆஐர்படுத்தப்பட்டிருந்த நபர் தனது குற்றத்தை ஏற்றுக்
கொண்டதைத் தொடர்ந்து நீதவான் இவ் குற்றவாளிக்கு 6000 ரூபா அபராதம்
விதித்ததுடன் 100 மணித்தியாலங்கள்  சமூதாய சீர்திருத்த நிகழ்ச்சி
திட்டங்களில் பங்குப்பற்ற வேண்டும் என்று கட்டளை பிற்ப்பித்து இவரை
மன்னார் மாவட்ட சமூதாய சீர்திருத்த உத்தியோகத்திரிடம் ஆற்றுப்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்தார்.

இவ் வழக்கில் மன்றில் குற்றவாளிக்கு சார்பாக சட்டத்தரணி செல்வராஜா டினேஸ் ஆஐராகி இருந்தார்.

கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவருக்கு அபராதத்துடன் சமூக சீர்திருத்த நிகழ்ச்சி திட்டத்தில் கலந்து கொள்ள நீதிபதி உத்தரவு... Reviewed by Author on July 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.