ஷஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர் விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மூளையாக செயற்பட்ட ஷஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர் விசாரணைக்காக கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டனர்.
இன்று புதன்கிழமை 03-07-2019 திகதி நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்றதாக கூறப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் மரணமடைந்தவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தி மரணசான்றிதழ் வழங்குவதற்கென மரண விசாரணைக்காகவே மேற்படி நபர்கள் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மரண விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களில் ஸஹ்ரானின் தங்கையான நியாஸ் மதனியா மற்றும் அவரது கணவர் எம்.எம். நியாஸ் சாய்ந்தமருது தாக்குதலில் பலியான வார உரைகல் ஊடகவியலாளர் என கூறப்படும் நியாஸ் என்பவரின் மனைவி அஸ்மியா உள்ளிட்டோர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் குற்றப்புலனாய்வு வாகனம் மற்றும் சிறைச்சாலை பேரூந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.
மேலும் இவ்வாறு இன்று ஆஜர் படுத்தப்பட்ட ஷஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் தொடர்பான விசாரணை யாவும் நீதிவானின் சமாதான அறையில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த விசாரணையின் போது வேறு வேறாக ஷஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் ஆஜர்படுத்தப்பட்டு நீண்ட நேர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
மேற்குறித்த மரண விசாரணை தொடர்பாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி புதன்கிழமை அன்று விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஷஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர் விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜர்
Reviewed by Author
on
July 04, 2019
Rating:
No comments:
Post a Comment