அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'அரசியல் எதிர்கால நிலையியல்' தொடர்பான கருத்தமர்வு

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தன்னிலையிழந்து தளர்வுற்று வழிவரைபடமின்றி தள்ளாடும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்கால நிலையியல் தொடர்பாக கருத்தமர்வுக்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் கருத்தமர்வில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கருத்தியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நலிவுற்றப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் என்னும் நோக்கு நிலையில் இவ் கருத்துப்பகிர்வுறவாடல் வவுனியா நகர விருந்தினர் விடுதியில் 21.07.2019 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு நடைபெற இருக்கின்து.

இவ் கருத்தமர்வில் 'சர்வதேச அரசியலும் தமிழ் தேசிய வகிபாகமும்' என்ற
தலைப்பில் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் கலாநிதி
கே.ரி.கணேசலிங்கம்,

  • 'அரசியல் இருப்பும் தமிழ் மக்களின் எதிர்காலமும்' என்ற தலைப்பில் கருத்தியியலாளர் நிஸாந்தன்,
  • 'நிழல் யுத்தமாகிவிட்ட நில அபகரிப்பும், மனித உரிமை மீறல்களும்' என்ற
  • பொருளில் தமிழர் மரபுரிமைப் பேரவை இணைத்தலவர் வி.நவநீதன்,

  • 'கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் சவால்களும் சந்தர்ப்பதவாத அரசியலும்' என்ற தலைப்பில் தமிழ் மக்கள் பேரவைத் இணைத்தலைவர் த.வசந்தராசா ஆகியோர் பேருரையாற்ற இருக்கின்றனர்.
வவுனியாவில் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'அரசியல் எதிர்கால நிலையியல்' தொடர்பான கருத்தமர்வு Reviewed by Author on July 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.