அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட அறநெறிப்பாடசாலைகள் இணையம் நடாத்திய அறநெறி ஆசிரியர்களுக்கான. விசேட கருத்தமர்வு...

மன்னார் நலிவுற்றோநலன் காப்பு நிதியத்தின் நிதி அனுசரணையுடன் மன்னார் மாவட்ட அறநெறிப்பாடசாலைகள் இணையம் நடாத்திய அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான. விசேட கருத்தமர்வு
இன்று காலை 09.30மணியளவில் ஆரம்பமாகி 4 மணி வரை நடைபெற்றது.

 இக்கருத்தரங்கில் வளவாளர்களாக மன்னார் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருவாளர் நித்தியானந்தன் மற்றும் இந்து சமய ஆசிரிய ஆலோசகர் திருவாளர் ரமேஷ் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி ஆசிரியர் திருவாளர் சோ றோகன்ராஜ் ஈச்சலவக்கை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர் திரு அ. சூரிய குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மன்னார் நலிவுற்றோர் நலன் காப்பு நிதியத்தின் செயலாளர் நாயகம் திருவாளர் எஸ் எஸ் ராமகிருஷ்ணன் ஐயா அவர்களும்  நிதி பணிப்பாளர் திரு சு பிருந்தாவன நாதன் ஐயா அவர்களும்
இணையத்தின் உப தலைவர் திருவாளர் க.பத்மகுமார் அவர்களும் அறநெறிப்பாடசாலை இணையத்தின் மாந்தை மேற்கு இணைப்பாளர் திருவாளர் சிவா அவர்களும் இணையத்தின் செயலாளர் செல்வி மேனகா இணையத்தின் பொருளாளர் திருமதி ம.ஞான சியாமளா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 இந் நிகழ்வு மன்னார் மாவட்ட பாடசாலைகள் இணையத்தின் தலைவர் ஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு  பயனடைந்தனர்.

மன்னார் மாவட்ட அறநெறிப்பாடசாலைகள் இணையம் நடாத்திய அறநெறி ஆசிரியர்களுக்கான. விசேட கருத்தமர்வு... Reviewed by Author on July 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.