அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் பிரதேச சபைக்கான முருங்கன் உப அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு.....

நானட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட முருங்கன் பகுதியில் நானாட்டான் பிரதேச சபைக்கான உப அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று காலை நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் திரு.பரஞ்சோதி தலைமையில் இடம் பெற்றது.

வடமாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் 12.2 மில்லிய்ன் ரூபா செலவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அலுவலகத்தில் இயங்கி வந்த முருங்கன் உப பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா முருங்கன் பிட்டி பகுதியில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயளாலர் திரு.பத்தினாதன் நானாட்ட பிரதேச சபை உபதவிசாளர் மும்மத தலைவர்கள் பிரதேசசபை செயளாலர் பிரதேச சபை உறுப்பினர்கள் ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வின் பின்னர் மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட பெரிச்சார் கட்டு புனித அந்தோனியார் சனசமூக நிலையமும் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.



நானாட்டான் பிரதேச சபைக்கான முருங்கன் உப அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு..... Reviewed by Author on July 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.